கேரளாவில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் பூந்தோட்டம் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் தோட்டத்திற்கு பூப்பறிக்கச் சென்ற 9 வயது சிறுமியை அங்குள்ள தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற பாதிரியார் தேவதாஸ் (64) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதன்பிறகு மிரட்டல்விடுத்தே, அடிக்கடி சிறுமியை தனது குடியிருப்புக்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்தும் வந்துள்ளார் பாதிரியார் தேவதாஸ்.

பாதிரியாரின் பிடியில் சிக்கியதால் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளாள் அந்த சிறுமி. இதையடுத்து சிறுமி படிக்கும் பள்ளியின் நிர்வாகிகள், அவளை மனநல ஆலோசனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உளவியல் நிபுணர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது பாதிரியாரின் லீலைகள் வெளியே வந்தன.

அவளது வாக்குமூலத்தை பதிவு செய்த மாநில குழந்தைகள் நலக் கமிட்டி அதிகாரிகள் போலீசில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவதாஸை நேற்று கைது செய்தனர். கேரளாவில் பாதிரியார்கள் இதுபோன்ற குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்படுவது தொடர் கதையாகிவருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+