சிறுமியை கர்ப்பமாக்கிய கேரள பாதிரியார் கைது
கோட்டயம்: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் துமாரம்பரா பகுதியில் வழிபாட்டு குழு நடத்தி வருபவர் பாதிரியார் சஜன் ஜேக்கப். வழிபாடு நடத்த வரும்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பாதிரியாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சஜன் ஜேக்கப் உடல்ரீதியாக அச்சிறுமியுடன் நெருக்கமாக இருக்க முயன்றுள்ளார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த சிறுமியிடம் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளார்.
இதன்பிறகு சிறுமியுடன் சஜன் ஜேக்கப் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் நெருக்கத்தின் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்தாள். தன்னை திருமணம் செய்யும்படி சஜன் ஜேக்கப்பிடம் வற்புறுத்த தொடங்கினாள். திருமணம் செய்ய விரும்பாத பாதிரியார் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து பாதிரியாரை தேடி வந்த போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.