பாட்னா குண்டு வெடிப்பில் பிடிபட்டவர் தப்பியோட்டம்
பாட்னா: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தொடர்பாக பிடிபட்ட ஒருவர் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடியுள்ளார்.
பாட்னா குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாயினர், மேலும் 85க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் மெகாரே அலாம் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இவர் இந்திய முஜாஹிதின் தீவிரவாத அமைப்பின் மூளையாக செயல்படும் தெக்ஷின் அக்தரின் கூட்டாளி. இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் மெகாரேயிடம் விசாரணை நடத்தி வந்தனர் அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி சென்று மெகாரே தப்பியோடி விட்டார்.
தங்கள் பாதுகாப்பில் இருந்த முக்கிய தீவிரவாதி தப்பியோடியதால் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து உள்ளூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications