கலப்பு மணம் செய்த மகனிடம் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு போட்ட அப்பா!

இந்த வழக்கைப் போட்டுள்ளவரின் பெயர் சித்தநாத் சர்மா. இவர் ஒரு வழக்கறிஞர். இவர் தனது மகன் சுஷாந்த் ஜாசு மீது வழக்குப் போட்டுள்ளார். அதில், எனது மகன் கலப்பு திருமணம் செய்துள்ளான். எனவே அவனை நான் ஒதுக்கி வைத்து விட்டேன். இனிமேல் எனது பெயரை அவன் எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. மீறி எனது பெயரை பயன்படுத்தினால், பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ. 10,000 எனக்கு காப்புரிமையாக தர வேண்டும்.
மேலும் எனது பெயரையும், கெளரவத்தையும் பாழ்படுத்தி விட்டான் எனது மகன். எங்களது விருப்பத்தை மீறி அவன் வேறு சாதிப் பெண்ணை மணந்துள்ளான். எனவே அதற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி தர வேண்டும் என்று கூறியுள்ளார். தானாப்பூர் கோர்ட்டில் இந்த வழக்குப் போடப்பட்டுள்ளது.
சுஷாந்த் ஜாசு, மத்திய அஏரசில் சீனியர் வரி உதவியாளராக குஜராத் மாநிலம் பாலம்பூர் நகரில் பணியாற்றி வருகிறார். இவர் தானாப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி திருமணம் செய்தார். இது இரு சாதித் திருமணமாகும். பெண், பாட்னாவில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.
வழக்கு குறித்து சர்மா கூறுகையில், நானும், எனது மனைவியும் இத்தனை காலமாக எங்களது மகனுக்காக நேரத்தை செலவிட்டுள்ளோம், பணத்தை செலவிட்டுள்ளோம். ஆனால் அவன் துரோகம் செய்து விட்டான். இத்தனை காலமாக வளர்த்து வந்த எங்களை விட்டு விட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த பெண்ணிடம் காதல் வயப்பட்டு எங்களைத் தூக்கி எறிந்து விட்டான்.
எனது மகனின் செயல், 400 ஆண்டு கால குடும்பத் திருமணப் பாரம்பரியத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது என்றார்.
இப்படியும் சில அன்புள்ள அப்பாக்கள்... இருக்கத்தான் செய்கிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications