காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி: மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.
87 உறுப்பினர்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.
இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 44 இடங்கள் தேவை. 28 இடங்களைப் பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி, 25 இடங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது. ஆனால் இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மக்கள் ஜனநாயகக் கட்சி விதித்திருந்தது. இதனை பாரதிய ஜனதாவும் ஏற்கவில்லை.
மேலும் 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய மாநாடு கட்சியும், 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசும், காஷ்மீரில் பாரதிய ஜனதா அரசு அமைவதை விரும்பவில்லை. இந்த கட்சிகள் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன. அதே நேரத்தில் இக் கட்சிகளின் ஆதரவை ஏற்பது பற்றி மக்கள் ஜனநாயக கட்சி தனது முடிவை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
இந்தநிலையில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரிய கட்சி என்ற முறையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆட்சி அமைக்க உரிமை உள்ளது; காஷ்மீரில் மதசார்பற்ற ஆட்சி அமைவதற்கு ஆக்கபூர்வமான ஆதரவை காங்கிரஸ் அளிக்கும் என்றார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது.
இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நயீம் அக்தர் கூறுகையில், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய பெரிய கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றார்.
கூட்டணி அரசு அமைப்பது குறித்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் மக்கள் ஜனநாயக கட்சி மேலிடம் நேற்று ஆலோசனை நடத்தியது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications