10 வருடங்களுக்கு பின்னர் அமைதியான குடியரசு தின கொண்டாட்டம்.. காஷ்மீரில்
ஸ்ரீநகர்: கிட்டதட்ட 10 வருடங்களுக்கு பின்பாக எந்தவிதமான மோதலும் இல்லாமல், அமைதியான முறையில் இல்லாமல் குடியரசு தினத்தினைக் கொண்டாடியுள்ளது காஷ்மீர்.
நாடு முழுவதும் இன்று 66 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்சி ஸ்டேடியத்தில் குடியரசு தின அணி வகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதே போல மாவட்ட தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

காஷ்மீரில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அங்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முதல் முறையாக செல்போன், இன்டர்நெட் சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தீவிரவாதத் தாக்குதலோ, மோதலோ நடைபெறவில்லை. மிகவும் பலத்த பாதுகாப்புடன் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
2005 ஆம் ஆண்டு ஸ்ரீநகர் பக்சி ஸ்டேடியம் அருகே தீவிரவாதிகள் குண்டு வைத்து நாசவேலையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் எஸ்.எம்.எஸ் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது 10 ஆண்டுக்கு பிறகு இந்த சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications