அமெரிக்க பெண் பலாத்கார வழக்கு: 'பீப்ளி லைவ்' பட இயக்குநருக்கு 7 ஆண்டு சிறை
டெல்லி: அமெரிக்க ஆய்வுத்துறை பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 'பீப்லி லைவ்' பட இணை-இயக்குனர் மஹ்மூத் பாரூக்கிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010-ம் ஆண்டில் இந்தி நடிகர் அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த இந்திப் படம் பீப்லி லைவ். விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், இணை இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியவர் மஹ்மூத்.

அமெரிக்காவில் இருந்து 35 வயதான பெண் ஒருவர் தனது உயர்கல்வி சம்பந்தமான ஆராய்ச்சி விஷயமாக இந்தியா வந்திருக்கிறார். டெல்லியில் ஆராய்ச்சியின் போது இயக்குநர் மஹ்மூத் உதவி செய்ய, பின்பு குடும்ப நண்பர்களாக இருவரும் பழகி வந்துள்ளனர்.
இதனிடையே ஒருநாள் அப்பெண்ணை விருந்துக்கு அழைத்த பரூக்கி கடுமையான குடிபோதையில் அமெரிக்க பெண்ணை கட்டாயப்படுத்தி பலவந்தமாக பலாத்காரம் செய்தததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், 2015ம் ஆண்டு மஹ்மூத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் மஹ்மூத் பாரூக்கியை கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஜூலை 30-ம் தேதி பாரூக்கி குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், மஹ்மூத் பாரூக்கிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அபாரதம் செலுத்த தவறினால், சிறை தண்டனை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications