இது தாங்க வேற்றுமையில் ஒற்றுமை: விசில் போடு!
பில்வாரா: ராஜஸ்தானில் உள்ள சுபி தர்காவில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் மேவார் பகுதியில் உள்ளது பில்வாரா நகரம். அந்த நகரில் பிரபல சுபி புனிதரான ஹஸ்ரத் அப்துல் ஜப்பார் அவர்களின் நினைவாக தர்கா உள்ளது. இந்நிலையில் பில்வாராவில் அப்துல் ஜப்பார் தர்காவின் 23வது வருடாந்திர உரூஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
உரூஸை முன்னிட்டு நகரங்களில் உள்ள பல்வேறு வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்கள் மத பாடல்களை பாடினர். தர்காவுக்காக நன்கொடையும் வசூலிக்கப்பட்டது.
ஊர்வலம் இறுதியில் தர்காவை அடைந்தது. அதன் பிறகு மக்கள் ஜப்பார் அடங்கியிருக்கும் இடத்தை சுற்றி வந்து பிரார்த்தனை செய்தனர். ஜப்பார் அடங்கிய இடத்தில் மக்கள் மலர் தூவினர். பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தர்காவில் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.
முஸ்லீம்களின் உரூஸ் விழாவில் மக்கள் மதவேறுபாடு இன்றி கலந்து கொண்டது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications