பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைப்பு: டீசல் விலை 28 காசுகள் உயர்வு !
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்வர். ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகளை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 59.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.44.96, கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.64.64 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.48.33 க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.65.73 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.51.52 க்கும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.59.10 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.45.62 காசுகளாகவும் இருக்கும்.