பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 உயர்வு; டீசல் விலையும் 98 காசுகள் உயர்வு;இன்று நள்ளிரவு முதல் அமல்
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைப்பர்.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 61 ரூபாயை தாண்டியுள்ளது. டீசல் விலை மீண்டும் 50.9 ரூபாயை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications