For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள்; டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்வு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை 15 நாடகளுக்கு ஒரு முறை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன.

Petrol, diesel rate changed from today midnight

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று உயர்த்தி அறிவித்துள்ளன. விநியோகஸ்தர்களின் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகளும், டீசல் விலை 10 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இத்தகவலை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த 30ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தியும், டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகளும் குறைக்கப்பட்டிருந்தன.

English summary
Petrol price 14 paisa per litre hiked, while diesel rate hike 10 paisa a litre in the rates effective from today midnight
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X