For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும் அதேசமயம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.26 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது.

Petrol new price; Is effective from today midnight

அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.26 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த விலை உயர்வின் மூலம் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.65.65-க்கும், டீசல் ரூ.55.19-க்கும் விற்பனை செய்யப்படும். கடைசியாக ஜூன் 1-ம் தேதி விலை உயர்த்தப்பட்டபோது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58-ம் டீசல் ரூ.2.26ம் உயர்த்தப்பட்டிருந்தது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, 15 நாட்களுக்கு ஒரு முறை எரிபொருட்கள் விலையில், எண்ணெய் நிறுவனங்கள் திருத்தம் செய்துவருகின்றன. இதன்படி, கடந்த ஜூன் 1ம் தேதியன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ.2.58 வரையும், டீசல் விலை ரூ.2.26 வரையும் உயர்த்தப்பட்டிருந்தது.

English summary
Petrol price rs.1.26 per litre hiked while diesel rate increased by 5 paisa a litre in the rates effective from today midnight
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X