பூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு
கான்பூர்: 40 ஆண்டுகளுக்கு முன்பு பூலான்தேவியின் கும்பலால் 20 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியிடும் நாளில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பெஹ்மால் கிராமத்தில் 1981-ஆம் ஆண்டு கொள்ளை கூட்டத்தின் தலைவியான பூலான்தேவி தனது அடியாட்களுடன் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த 20 பேரை கொன்று குவித்தனர்.
இது பூலான்தேவியை அந்த சமூகத்தைச் சேர்ந்த இருவர் பலாத்காரம் செய்ததற்கான பழிவாங்கும் செயல் என கூறப்பட்டது. இந்த படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.

என்கவுன்ட்டர்
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற அப்போதைய உ.பி. முதல்வர் வி பி சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த வழக்கில் பூலான்தேவி உள்பட 35 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அந்த 35 பேரில் 8 பேர் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

பூலான்தேவி சரண்
3 பேர் தலைமறைவாகினர். பின்னர் 1983-ஆம் ஆண்டு பூலான்தேவி மத்திய பிரதேச மாநில போலீஸாரிடம் சரணடைந்தார். 11 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் 1994-ஆம் ஆண்டு விடுதலையானார்.

பூலான்தேவி கொலை
பின்னர் தன் மீதான வழக்குகளை சட்டரீதியில் எதிர்கொண்டார். அந்த சமயம் அரசியலில் இறங்கிய பூலான்தேவி எம்பியாகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி ஒரு மர்மகும்பலால் அவரது வீட்டுக்கு வெளியே பூலான்தேவி கொல்லப்பட்டார்.

3 பேர் ஜாமீனில்
2012-ம் ஆண்டு கான்பூரில் உள்ள கொள்ளை சம்பவங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பெஹ்மால் படுகொலை வழக்கில் உயிரோடு இருக்கும் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. போஷா, பிகா, விஸ்வநாத், ஷியாம்பாபு ஆகிய அந்த 4 பேரில் போஷா மட்டும் சிறையில் உள்ளார். மற்ற 3 பேரும் ஜாமீனில் உள்ளனர்.

ஆவணங்கள் மாயம்
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதிர்குமார் நேற்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தார். நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியதும், வழக்கு தொடர்பான உண்மையான ஆவணங்கள் மாயமாகி இருப்பதை நீதிபதி அறிந்தார்.

பரபரப்பு
இதையடுத்து நீதிமன்ற ஊழியர்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர் இந்த வழக்கை 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நீதிமன்றத்தில் இருந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications