சாப்ட்வேர் நிறுவனங்களை கேரளாவுக்கு இழுக்க பிரனாயி விஜயன் அதிரடி திட்டம்
திருவனந்தபுரம்: தகவல் தொழில் நுட்ப துறைக்கு முக்கியத்துவம் தர உள்ளதாகவும், 'ஐடி ஹப்'களை கேரளாவில் உருவாக்க உள்ளதாகவும், இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் பேட்டி, கேரளத்தின், தொழில் வளர்ச்சிக்கு இடதுசாரி அரசுகள் தடைக்கற்களாக இருந்த காலத்தை மாற்றி, புது யுகத்தை நோக்கிய முன் நகர்வின் அச்சாரமாக பார்க்கப்படுகிறது.
கேரளத்தில் தொழில் தொடங்க முதலாளிகளுக்கு இன்னமும் தைரியம் வரவில்லை. இதற்கு காரணம் அங்குள்ள இடதுசாரி தொழிற்சங்கங்களின் ஆதிக்கம்.

தொழில் தொடக்கம்
தொழிலாளர் நலனை பேணுவதற்காக தொழிற்சங்கங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை கொஞ்சம் ஓவர் டோசாக இருப்பதால் தொழில் தொடங்க முடிவதில்லை என்பது முதலாளிகள் புலம்பல்.

வெளி மாநிலங்கள்
இதன் காரணமாக, வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மலையாளிகள் இடம் பெயர்கிறார்கள். சென்னையின் பெரும்பாலான டீ கடை முதலாளிகளும், பெங்களூரின் பெரும்பாலான பை தைக்கும், கேட்டரிங் செய்யும் தொழிலாளர்களாகவும் இவர்கள் வலம் வருகிறார்கள். அரபு நாடுகளிலும் இவர்கள் ஆதிக்கமே.

மாறிவிட்டது
இந்நிலையில் பிரனாயி விஜயன் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது: கேரளம் இப்போது பழைய மாதிரியில்லை. இங்குள்ள தொழிற்சங்கங்களும், நிறுவனங்களும் இணைந்து, செயல்பட தயாராக உள்ளன.

சாலை, ரயில் போக்குவரத்து
கேரளாவில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளேன். இதற்கு வசதியாக சாலை விரிவாக்கம், ரயில் பாதை அதிகரிப்பு உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் முதலில் மேற்கொள்ளப்படும்.

நிலம் இழந்தாலும் இழப்பீடு
இந்த பணிகளின்போது நிலம் இழப்போருக்கு முன்பு மாதிரியில்லாமல் புதுமாதிரி மிகுந்த பலன் அளிக்கும் பேக்கேஜ் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் அவர்கள் சம்மதத்தோடு நிலம் வாங்க முடியும்.

கேரளாவின் தனித்தன்மை
அதேநேரம், எல்லா தொழிற்சாலைகளுக்கும் கேரளா கம்பளம் விரிக்காது. இந்த மண்ணுக்கு உகந்த தொழில் நிறுவனங்களை மட்டுமே அனுமதிப்போம். சுற்றுலாத்துறை, விவசாய துறை போன்றவை சார்ந்த முதலீடுகள் வரவேற்கப்படும்.

சிலிக்கான்வேலி
அதேபோல, சுற்றுச்சூழலை ஊறுவிளைவிக்காத தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணனுடன் இதுதொடர்பாக பேசியுள்ளேன். அவர் பிற ஐடி நிறுவனங்களோடு ஆலோசித்து, அமெரிக்காவின் சிலிக்கான்வேலிபோல, கேரளாவில் 'ஐடி ஹப்' தொடங்க உதவுவதாக கூறியுள்ளார்.

அரசியல் மோதல்
பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குவதாக மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். முதலில் அவரது கட்சி தொண்டர்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளட்டும். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications