பொதுமக்கள் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது: பியூஷ் கோயல்
டெல்லி: பொதுமக்களின் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பொதுத்துறை வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்கு நிறைய கேள்விகளைக் கேட்க மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளித்திருக்கிறது என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், "பொதுமக்களின் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அரசு நூறு சதவிகிதம் பொதுமக்களின் பக்கம் நிற்கிறது" என்று உறுதி கூறினார்.
மேலும், தனியார் நிறுவனங்களில் செலுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பணம் குறித்து பேசிய பியூஷ் கோயல், தனியார் நிறுவனங்களில் இருக்கும் பொது மக்களின் பணம் எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பது என்னால் உறுதியளிக்க முடியாது. மேலும், அந்த பணங்களுக்கு அதிகப்படியான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "அண்மையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், பொதுத்துறை வங்கிகளை அதிகாரத்துடன் கையாள்வதில் மத்திய வங்கிக்கு சில அதிகாரக் குறைகள் உள்ளன என்று தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தார் என்று கூறியவர், ரிசர்வ் வங்கிக்கு அதிகாரங்கள் இருக்கின்றன ஆனால் இன்னும் கூடுதலான அதிகாரங்கள் தேவை என்ற கருத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்று கூறினார்.
மேலும், பியூஷ் கோயல் கூறுகையில், "பொதுத்துறை வங்கிகள் நேர்மையான நிறுவனங்களுக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதோடு, பொதுத்துறை வங்கிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications