கள்ளநோட்டை தடுக்க பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க திட்டம் - லோக்சபாவில் மத்திய அரசு தகவல்!
டெல்லி: ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை ஒழிக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும், விரைவில் பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிக்கும் வகையில் பழைய 500, 1,000 நோட்டு ரத்து செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ.500, ரூ.1,000 நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. இருப்பினும், சில்லரை தட்டுப்பாடு தீரவில்லை. இதை போக்க, குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு அதிகம் புழக்கத்துக்கு விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிளாஸ்டிக் கரன்சி அச்சிட்டு வெளியிட உள்ளதாக லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் இதுதொடர்பான கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிளாஸ்டிக் அல்லது பாலிமரில் ரூபாய் நோட்டு அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கு மூலப்பொருட்கள் கொள்முதலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
பிளாஸ்டிக் நோட்டின் சராசரி ஆயுட்காலம் 5 ஆண்டுதான். ஆனால் இதில் கள்ளநோட்டு அச்சிட முடியாது என மத்திய அரசு கருதுகிறது. முதன்முதலில் இத்தகைய கரன்சி, கள்ளநோட்டை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டிருந்தது.
ரிசர்வ் வங்கி நீண்ட காலமாகவே பிளாஸ்டிக் கரன்சி வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதுபற்றி, 2014ம் ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய தட்பவெப்ப நிலைக்கு பிளாஸ்டிக் கரன்சி ஏற்புடையதா என்று அறிய கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் போன்ற குறிப்பிட்ட நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு வெளியிட முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் நோட்டில் பாதுகாப்பு அம்சம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அர்ஜூன் ராம் மெஹ்வால், நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.1,000 நோட்டில் பாதுகாப்பு இழை இல்லை. இது ஹோசங்காபாத்தில் உள்ள பேப்பர் மில்லில் இருந்து சப்ளை செய்த தாளில் அச்சிடப்பட்டது. இதை கடந்த ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக இந்திய கரன்சி அச்சக மையம் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நேராமல் தடுக்க கூடுதல் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications