பிரதமரின் ஒடிசா, ஆந்திர வெள்ள சேத ஆய்வுப் பயணம் திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil

கடந்த மாதம் ஒடிசா மற்றும் ஆந்திராவின் கரையோர மாவட்டங்களை பாய்லின் புயல் தாக்கியது. அதன் மூலம் அப்பகுதியில் பலத்த சேதாரம் உண்டானது. எனவே, பாதிக்கப் பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி பிரதமர் சுற்றிப் பார்த்து சேதாரத்தை அளவிடுவார் என முன்னர் அறிவிக்கப் பட்டது.
ஆனால், காரணங்கள் தெரிவிக்கப் படாமல் பிரதமரின் இந்தச் சுற்றுப் பயணம் திடீரென ரத்து செய்யப் படுவதாக நேற்று செய்தி வெளியிட்டுள்ளது பிரதமர் அலுவலகம். புயல் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்த மன்மோகன் சிங் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications