மோடி விழாவில் உம்மன்சாண்டி பங்கேற்க தடை- கேரளா மக்களை அவமதித்ததாக ராகுல் கொந்தளிப்பு...
திருவனந்தபுரம்/ டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவில் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொள்ள கூடாது என விழா ஏற்பாட்டாளர்கள் தடை விதித்தது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உம்மன்சாண்டியை ஓரம்கட்டியதன் மூலம் கேரளா மக்களையே பிரதமர் மோடி அவமதித்துவிட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கொல்லத்தில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு சார்பில் கேரள முன்னாள் முதல்வர் ஆர். சங்கரின் சிலை திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்று சிலையை திறந்து திறந்து வைக்கிறார். இந்த விழா அழைப்பிதலில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
PM has insulted the people of Kerala, he has stopped our Chief Minister from going to a function-Rahul Gandhi pic.twitter.com/B1B940RzGD
— ANI (@ANI_news) December 14, 2015 ஆனால் இந்த விழாவை நடத்தும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவர் வெள்ளாபள்ளி நடேசன், முதல்வர் உம்மன்சாண்டியை தொடர்பு கொண்டு சிலை திறப்பு விழாவுக்கு நீங்கள் வர வேண்டாம் என முகத்தில் அடித்தாற்போல கூறியிருக்கிறார்.
இதனால் உம்மன்சாண்டி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இது கேரளா அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தவர்தான் இந்த வெள்ளாபள்ளி நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை ஓரம்கட்டுவது என்பது கேரளா மக்களையே அவமதிக்கும் செயல் என சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் சிங்வி, உம்மன் சாண்டி அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில முதல்வர். அவரை புறக்கணிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அவமானப்படுத்தியதற்கு சமம். பாரதிய ஜனதா அரசின் இத்தகைய செயல்பாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார்.
-
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!











Click it and Unblock the Notifications