நரேந்திர மோடிக்கு பிரதமருக்கான' பாதுகாப்பு அளிக்க பாஜக கோரிக்கை
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக தமது கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் மோடிக்கு பிரதமருக்கு வழங்கப்படுவது போல பாதுகாப்பு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தற்போது தேர்தல் காலம். தேர்தலை முன்னிட்டு பல இடங்களில் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எங்கள் கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. மோடியின் பாதுகாப்பை மிக எளிதாக மத்திய அரசு கருதுகிறது. பாட்னா குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்பதை இப்போது கூட பீகார் அரசு ஒப்புக் கொள்ள மறுக்கிறது.
மோடியை தீவிரவாதிகள் குறிவைத்திருக்கிறார்கள் என்பது மத்திய அரசுக்கு தெரியும். மோடியின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியலை கலக்காமல் பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அளிக்க வேண்டும். இன்னொரு பாட்னா குண்டுவெடிப்பு மீண்டும் நிகழாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications