பிரதமர் மன்மோகன்சிங் பிரியாவிடை உரை!! மோடி பெயரை சொல்லாமல் வாழ்த்து!!
டெல்லி: தனது வாழ்க்கையும் பதவிக் காலமும் திறந்த புத்தகமாக இருந்தது; கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை வலிமைப்படுத்தியிருக்கிறேன் என்று நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை நிகழ்த்திய பிரதமர் மன்மோகன்சிங் என்று தெரிவித்தார். தமது இந்த உரையில் எந்த ஒரு இடத்திலும் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை மன்மோகன்சிங் சொல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா வென்று புதிய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து இன்று தமது பதவியை பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்ய இருக்கிறார்.

அவர் நாட்டு மக்களுக்கு பிரியாவிடை கொடுத்து இன்று ஆற்றிய உரை:
நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு கடைசியாக உங்களிடம் உரையாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பொறுப்பை ஏற்றேன். என்னைப் பொறுத்தவரையில் மிக சரியான முறையில் செயலாற்றினேன்.
இன்று நான் பதவி விலகுகிறேன். தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே பதவி விலக முடிவு செய்தேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையும் பதவிக் காலமும் திறந்தவெளி புத்தகம் என்பதை எப்போதும் கூறி வருகிறேன். நான் இந்த நாட்டுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி இருக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை வலிமைப்படுத்தியுள்ளோம். அதற்காக பெருமைப்படுகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பை விட இன்று இந்திய நாடு வலிமையான நாடாக இருக்கிறது. இது உங்கள் அனைவராலும்தான் சாத்தியம்.
நான் பதவி விலகினாலும் உங்களுக்கான சேவையாற்றியது எனது நினைவுகளில் இருக்கும். எதிர்கால இந்தியா மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு மன்மோகன்சிங் உரையாற்றினார்.
இந்த உரையில் எந்த ஒரு இடத்திலும் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை மன்மோகன்சிங் சொல்லவே இல்லை. அவரது சொல்லாமலேயே புதிய அரசுக்கு வாழ்த்துகள் என்று மட்டும் தெரிவித்திருக்கிறார் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications