செஷல்ஸில் பிரதமர் மோடி! 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்தியா, செஷல்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய 3 இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்று மாலை அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் செஷல்ஸ் புறப்பட்டு சென்றார்.

PM Modi accorded ceremonial reception at State House in Seychelles

செஷல்ஸ் தலைநகர் விக்டோரியாவுக்கு நேற்று இரவு மோடி போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடல் எல்லை வரையறையில் ஒத்துழைப்பு, புதுப்பிக்கப்படத்தக்க எரிசக்தி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ் நாடு கடல் வழி போக்குவரத்தில் மட்டும் நண்பர் அல்ல. உண்மையான நண்பராக திகழ்கிறது. இந்தியாவும், செஷல்ஸ் நாடும் பொருளாதார வளர்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+