டெல்லி டூ ஜம்மு.. ஹெலிகாப்டரில் பயணம்.. காஷ்மீர் எல்லையில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
ஸ்ரீநகர்: பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இன்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி வழக்கம் போல ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தனது தீபாவளியை கொண்டாடினார்.
2014ல் இருந்து பிரதமர் மோடி இரண்டு முறையா ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். இன்று மூன்றாவது முறையாக அவர் ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடினார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூன்ச் மாவட்டத்திற்கு சென்றார்.
பூன்ச் மற்றும் ராஜோரி பகுதியில் இருக்கும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருந்து இந்திய ராணுவத்தின் அலுவலகத்தில் அவர் தீபாவளியை கொண்டாடினார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு பின் கொண்டாடப்படும் முதல் தீபாவளி ஆகும் இது.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு பின் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. அங்கு தலைவர்கள் பலர் இன்னும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் அங்கு முழுமையாக தகவல் தொடர்பு அளிக்கப்படவில்லை.
அதேபோல் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் அதற்கு உடனடியாக பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாட காஷ்மீர் சென்றுள்ளார். மொத்தம் நான்கு ஹெலிகாப்டர்கள் விழா நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளது. அதில் ஒரு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி காஷ்மீர் சென்று இருக்கிறார்.