பிரதமர் மோடி ட்விட்டரில் ஃபாலோ செய்யும் அந்த பெங்களூரு இளைஞர்!
பிதரமர் மோடி டிவிட்டரில் பெங்களூரு இளைஞரை பின் தொடர்ந்து வருகிறார். இந்த செய்தி நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது.
டெல்லி பிதரமர் மோடி டிவிட்டரில் பெங்களூரு இளைஞரை பின் தொடருவது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் ஜெயின். சிறுகுறு தொழிலதிபாரான இவரை பிரதமர் மோடி டிவிட்டரில் பின்தொடர்ந்து வருகிறார்.
இந்த ஆச்சரியம் ஒரு திருமண அழைப்பிதழால் நிகழ்ந்துள்ளது. அதாவது ஆகாஷின் சகோதரியின் திருமணத்துக்காக அவரது குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சிட்டுள்ளனர்.
|
ஸ்வச்ச பாரத் லோகோ
மோடியின் தீவிர ரசிகரான ஆகாஷின் அப்பா, பாஜக அரசின் திட்டங்களில் ஒன்றான ஸ்வச்ச பாரத் தூய்மை இந்தியா லோகோவை பயன்படுத்தி ஏன் அழைப்பிதழ் அச்சடிக்கக்கூடாது என கேட்டுள்ளார். மேலும் நாட்டின் நன்மைக்கான ஒரு திட்டத்தை முன்னெடுத்து செல்லலாம் எனக்கூறி தூய்மை இந்தியா லோகோவை போட்டு அழைப்பிதழ் அச்சிட்டுள்ளனர்,
|
ரீடிவிட் செய்த பாஜகவினர்
அந்த அழைப்பிதழ் போட்டோவை ஆகாஷ் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டதோடு பிரதமர் மோடியையும் டேக் செய்துள்ளார். ஆகாஷ் ஜெயின் குடும்பத்தினரின் இந்த அழைப்பிதழை பாராட்டி ஏராளமான பாஜக நிர்வாகிகள் அதனை ரீடிவிட் செய்தனர்.
|
ஃபாலோ செய்த மோடி
இந்நிலையில் ஆகாஷுக்கு டிவிட்டரில் திடீர் இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அதாவது பிரதமர் மோடி ஆகாஷின் டிவிட்டை ரீடிவிட் செய்திருந்தார். மேலும் ஆகாஷையும் அவர் டிவிட்டரில் பின்தொடர தொடங்கியுள்ளார்.
|
மகிழ்ச்சியில் திளைத்துள்ள குடும்பம்
இதனால் ஆகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இதற்காக பிரதமருக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள ஆகாஷ், இப்படி நடக்கும் என நினைத்துகூட பார்க்கவில்லை என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
ஒரு டிவிட்டால் பிரபலமானார்
அனைவராலும் பின்தொடரப்படும் ஒரு நபர் என்னை பின்தொடர்கிறார். இதைவிட பெரிய விஷயம் எதுவும் இல்லை என்றும் ஆகாஷ் கூறியுள்ளார். பிரதமரே பின் தொடர்வதால் ஆகாஷ் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார். இத