டெல்லி மாசுபடுவதை தடுக்க எம்.பி.க்களுக்காக பேட்டரி பஸ்களை பரிசாக வழங்குகிறார் பிரதமர் மோடி
டெல்லி: தலைநகர் டெல்லி மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் எம்.பி.க்கள் பயணம் செய்வதற்காக 2 பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை வரும் 21-ந் தேதி பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபடுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வாகனங்களை இயக்குவதிலும் கூட கட்டுப்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக 15 நாட்களுக்கு கல்வி நிறுவனங்களை இழுத்து மூடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசும் தம் பங்குக்கு டெல்லி மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்காக பேட்டரியில் இயங்கக் கூடிய 2 பேருந்துகளை எம்.பி.கள் பயணத்துக்காக சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கொடுக்க உள்ளது.
இந்த பேருந்துகளை வரும் 21-ந் தேதி லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் பிரதமர் மோடி பரிசாக கொடுக்க உள்ளார். லித்தியத்தால் ஆன ரீ சார்ஜ் செய்யும் வகையிலான பேட்டரிகளால் இப்பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications