திருவள்ளுவர் தினம்: நூற்றாண்டுகள் கடந்தும் தாக்கம் ஏற்படுத்துபவர் திருவள்ளுவர்-மோடி புகழாரம்!
டெல்லி: திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: திருவள்ளுவரை நான் பணிகிறேன். நூற்றாண்டுகள் கடந்தும், திருவள்ளுவரின் சிந்தனைகளும், எழுத்துக்களும், மனிதர்களுக்குள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
திருக்குறளின் குஜராத்தி மொழியாக்கத்தை இன்று நான் வெளியிட உள்ளேன். இவ்வாறு தனது டிவிட்டில் மோடி கூறியுள்ளார்.
I bow to the great Thiruvalluvar. Simple & vast in scope, his thoughts & writings have been a strong influence on humanity for centuries.
— Narendra Modi (@narendramodi) January 16, 2015 பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் தனது டிவிட்டர் தளத்தில், தமிழிலேயே தமிழக மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளை மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருவள்ளுவர் தினத்திற்குக்கும், மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
இதனிடையே பாஜக எம்.பி தருண் விஜய் மேற்கொண்ட திருக்குறள் பயணம் சென்னையில் இன்று நிறைவுற்றது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தருண் விஜயின் திருக்குறள் மீதான ஆர்வத்தை பாராட்டினார்.












Click it and Unblock the Notifications