'தேர்தல் நெருங்குதே' ராஜஸ்தானில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்.. தொடங்கி வைத்தார் மோடி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சுமார் 24 ஆயிரம் கோடி மதிப்பு மிக்க பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் நாட்டை குழிதோண்டி புதைப்பதாகவும் ஆட்சியில் இருந்து சென்றால் நாட்டை இழிவு படுத்துவதாகவும் விமர்சித்தார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இதனால், அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கர்நாடகாவில் பெற்ற வெற்றியுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையே இருக்கும் மோதல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்தாலும் அதை சரி கட்டும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. மறுமுனையில் பாஜக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தான், ராஜஸ்தானுக்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். ராஜஸ்தானில் சுமார் 24 ஆயிரம் கோடி மதிப்பு மிக்க பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
குறிப்பாக 500 கி.மீட்டர் தொலைவு கொண்ட அமிர்தசரஸ்-ஜாம்நகர் இடையேயன மேம்படுத்தப்பட்ட விரைவுச் சாலை உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். ஆட்சியில் இருந்தால் நாட்டை குழிதோண்டி புதைப்பதாகவும் ஆட்சியில் இருந்து சென்றால் நாட்டை இழிவு படுத்துவதாகவும் விமர்சித்தார்.
மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:- வேகமாக வளர்ச்சி அடையும் ஆற்றல் கொண்ட மாநிலம் ராஜஸ்தான். அதன் காரணமாகவே இங்கு சாதனை படைக்கும் விதமாக இங்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு அளப்பறிய ஆற்றல் உள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ரயில்வே மேம்பாடுக்காக சராசரியாக ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே மேம்பாடுக்காக 10 ஆயிரம் கோடி நிதியை நாங்கள் ஒதுக்கி வருகிறோம்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அவர்களுக்குள் தான் சண்டை போட்டு வருகிறார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருடைய காலை பிடித்து வாரி விட்டு கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் டெல்லியில் இருந்து ஜெய்பூருக்கு திட்டங்களை அனுப்புகிறோம். ஆனால், அவற்றை செயல்படுத்துவதில்லை . ராஜஸ்தானின் பிரச்சினைகளை தீர்க்கவோ.. மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவோ காங்கிரஸ் எதையுமே செய்யவில்லை.
ஒவ்வொரு வீட்டிற்கும் பயன்களை அளிக்கும் பாஜகவின் திட்டங்களினால் காங்கிரஸ் கட்சி கலக்கம் அட்டைந்துள்ளது. மாநிலத்திற்கு தீங்கை மட்டுமே காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. ராஜஸ்தானில் வானிலை வெப்பம் மட்டும் அதிகரிக்கவில்லை. கங்கிரஸ் அரசுக்கு எதிரான மக்களின் வெப்பமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
புழுதி புயலில் சிக்கிய ராஜஸ்தான்.. வீடுகளை மூடியதால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு.. வீடியோ பாருங்க -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications