தற்கொலைப்படை தாக்குதல் நடந்த பிரஸ்ஸல்ஸுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
டெல்லி: பெல்ஜியம், அமெரிக்கா, செளதி ஆகிய 3 நாடுகளில் பிரதமர் மோடி புதன்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதில் முதல் கட்டமாக அண்மையில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்ட பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
பிரஸ்ஸல்ஸ் நகரில் கடந்த 22-ந் தேதி விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.எஸ். தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 34 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியரான ராகவேந்திரன் கணேசன் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ராகவேந்திரன் கணேசன் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அவரது உடல் செவ்வாய்க்கிழமை சென்னை கொண்டு வரப்பட்டது.

பிரஸ்ஸல்ஸ் புறப்பட்டார் மோடி
இதனிடையே பிரதமர் மோடியின் பிரஸ்ஸல்ஸ் பயணம் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரவு பிரஸ்ஸல்ஸ் புறப்பட்டுச் சென்றார். ஐ.எஸ். தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பெல்ஜிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர் சந்திப்புகள்...
பெல்ஜியம் நாட்டு வைர வியாபாரிகள் உள்ளிட்ட தொழில் அதிபர்களையும் மோடி சந்திக்கிறார். மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறார். பெல்ஜியம் நாட்டு எம்.பி.க்களையும், இந்திய வம்சாவளியினரையும் மோடி சந்தித்து பேசுகிறார்.

ஒபாமாவை சந்திக்கிறார்...
பின்னர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் 4-வது அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்துப் பேசுகிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இம்மாநாட்டில் கலந்து கொண்டாலும் அவரை மோடி சந்திப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

செளதி பயணம்
இதன் பின்னர் ஏப்ரல் 2-ந் தேதி வாஷிங்டனில் இருந்து செளதி அரேபிய தலைநகர் ரியாத்துக்கு மோடி செல்கிறார். அங்கு மோடி 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications