பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாட்டின் 15வது பிரதமராக நேற்று பதவியேற்ற நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் ஹைதராபாத் இல்லம் சென்றார் மோடி,
அங்கு ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனும் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு முன் உள்ள எல்லை தாண்டிய பயங்கரவாதம், மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து இருவரும் உரையாடினர்.












Click it and Unblock the Notifications