மோடியுடன் மைத்ரிபால சிறிசேன சந்திப்பு- தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்!
டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு பிரதமர் நரேதிரமோடி நேற்று இரவு விருந்தளித்தார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்தையின் போது, இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் குறித்து இருவரும் விவாதித்தனர்.

தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைத்ரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், இந்தியாவின் மூலம் இலங்கையில் நடைபெற்றுவரும் உள்கட்டமமைப்பு பணிகள் மற்றும் இருநாடுகளிடையேயான வர்த்தகம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது, இலங்கையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமத்துவமாக நடத்தப்படுவதற்காக சிறிசேனவுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜையினியில் இன்று நடைபெறும் கும்பமேளா நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சிறிசேன பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து சாஞ்சி நகரில் உலகப் புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்வையிடுகிறார். இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்காரிகா தர்மபாலா சிலையை சிறிசேன திறந்து வைக்கிறார். பின் பெங்களூர் வழியாக இலங்கைக்கு சிறிசேன திரும்புகிறார்.
-
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications