மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பிரதமர் மோடியின் தாயார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாய் நலமாக வீடு திரும்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபா நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்குப் பின் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

ஹீராபா குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள ராய்சன் கிராமத்தில் பிரதமரின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த புதன்கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக, அவர் காந்தி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு சுவாசக் கோளாறும் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிகிச்சைக்குப் பின் அவர் நேற்று வீடு திரும்பினார். தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications