இலங்கைக்கு பறந்தார் பிரதமர் மோடி... மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?
புத்த பூர்ணிமாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார்.
டெல்லி : இலங்கையில் நடைபெறும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு புறப்பட்டு சென்றுள்ளார்.
புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் புத்த பூர்ணிமாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த திருவிழா இலங்கையில் வெகு விமரிசையாக நடக்கும்.
உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். புத்த பூர்ணிமா திருவிழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு சென்றுள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, இலங்கை தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.