மோடியா பேசுறாரு?? குஜராத் தேர்தல் குறித்து தீயாக பரவும் ஆடியோ!
குஜராத் தேர்தல் குறித்து பிரதமர் மோடி தொண்டர் ஒருவரிடம் போனில் பேசும் ஆடியோ தீயாக பரவி வருகிறது.
Recommended Video

வதோதரா: குஜராத் தேர்தல் குறித்து பிரதமர் மோடி தொண்டர் ஒருவரிடம் போனில் பேசும் ஆடியோ தீயாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர் கோபால்பாய் கோகில். ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் இவர், பாஜக வார்டு மட்ட ஊழியராகவும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மாலை அவருக்கு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தபோது எதிர்முனையில் பிரதமர் மோடி பேசியதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

10 நிமிடங்கள் பேசிய மோடி
இதைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் தீபாவளி வாழ்த்தை தெரிவித்துக்கொண்டனர். பிரதமர் மோடி கோகிலின் மனைவியிடமும் போனில் பேசியுள்ளார்.இந்த ஆடியோ வாட்ஸ் ஆம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளனர்.

2011ஆம் ஆண்டு
2011ஆம் ஆண்டு மோடியின் சத்பவானா நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியை கோகில் சந்தித்துள்ளார். அப்போது பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

தேர்தல் குறித்து பேச்சு
கடந்த 2014 லோக் சபா தேர்தலில் வதோதரா தொகுதியில் இருந்து பிரதமர் மோடி போட்டியிட்ட போது கோகில் இறங்கி வேலை செய்துள்ளார்.பிரதமர் மோடி கோகிலிடம் மிக எளிமையாகவும் நட்பாகவும் பேசுகிறார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி வாய்ப்பு குறித்தும் இருவரும் பேசுகின்றனர்.

ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம்
இந்நிலையில் மோடியுடன் போனில் பேசிய கோகில் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொய் பிரச்சாரங்களை எப்படி சமாளிப்பது என கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் மோடி ஆரம்பி்த்த காலத்தில் இருந்தே இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இது போல் நடந்த பொய் பிரச்சாரங்களின் போதும் மக்கள் நம்பிக்கையை பெற்று நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறுகிறார்.

மக்களுக்கு புரியும்
நம் மீது பொய்களும் கேலிகளும் இல்லாத ஏதாவது தேர்தலை உங்களால் சொல்ல முடியுமா? என்னை ரத்த கரை படிந்தவர், கொலைகாரர் என்று எல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் இதையும் மீறி மக்கள் நம்பிக்கையை நாம் வென்றுள்ளோம். மக்களுக்கு உண்மை எது என புரியும் என்றும் மோடி பதிலளிக்கிறார்.

நேரத்தை வீணாக்காதீர்கள்
அவர்கள் பொய்யை பரப்பட்டும். ஆனால் மக்கள் அதனை நம்ப மாட்டார்கள். நீங்கள் இந்த வதந்திகளை கேட்ட கவலைக்கொள்ளாதீர்கள் என்றும் கோகிலுக்கு பிரதமர் மோடி தைரியம் சொல்கிறார். மற்றவர்களின் பொய்க்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அதனை உங்கள் மனதிலும் ஏற்றாதீர்கள் என்றும் மோடி கூறுகிறார்.

எந்த குற்றச்சாட்டும் இல்லை
பாஜக நீண்ட நாட்களாக ஆட்சியில் உள்ளது. ஆனால் நம் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே மக்களுக்கு உண்மை புரியும் என்றும் மோடி கூறுகிறார். நாம் உண்மையை பரப்ப வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

150 இடங்களில் வெற்றி
தான் அக்டோபர் 22 ஆம் தேதி வதோதராவுக்கு வர இருப்பதாக மோடி கூறுகிறார். அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் கோகில் உங்களுக்கு தீபாவளி பரிசாக 150 இடங்களில் வெற்றி பெற்று தருகிறோம் என்று கூறுகிறார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications