அலிகார் முஸ்லீம் பல்கலை. நூற்றாண்டு விழா... பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
அலிகார் : உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடிகலந்து கொள்ள உள்ளார்.
இந்த விழாவை அரசியல் அரசியல் ஆக்க வேண்டாம் என அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர் தெரிவித்து உள்ளார்..

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.இந்த பல்கலைக்கழகத்தின் நுாற்றாண்டு விழா வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார். அவரும், பிரதமர் மோடியும் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் அலிகார் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சம்மதித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விழா பல்கலையின் வளர்ச்சிக்கும், இங்கு படிக்கும் மாணவர்கள் வளர்ச்சிக்கும் உதவும். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி. எனவே சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அலிகார் பல்கலைக்கழக மாணவர்களின் செயல்பாடுகள் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாக்கபடும். இந்த பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பாஜக தலைவர்கள் அடிக்கடி கூறி வந்தனர். கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களும், டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் உள்ள மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலிகார் பல்கலைக்கழக மாணவர் விடுதி வளாகத்தில் பாகிஸ்தானின் முகமது அலி ஜின்னாவின் உருவப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது கடும் சர்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications