தெலுங்கானாவின் முதலாவது முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: நாட்டின் 29வது மாநிலமாக உதயமாகியுள்ள தெலுங்கானாவுக்கும் அதன் முதலாவது முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா புதிய மாநிலம் இன்று அதிகாலை உதயமானது. இதையொட்டி தெலுங்கானா முழுவதும் விடிய விடிய கொண்டாட்டம் களைகட்டியது.

இதன் பின்னர் இன்று காலை அம்மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களுடன் பதவியேற்றனர்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Congrats to K Chandrasekhar Rao Garu on taking oath as Telangana's 1st CM. My best wishes to people for the state's development journey.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/473300902338519041">June 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>இந்நிலையில் தெலுங்கானா மக்களுக்கும் புதிய முதல்வருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா புதிய மாநிலத்தைப் பெற்றுள்ளது. 29வது மாநிலமாக உதயமாகி இருக்கும் தெலுங்கானாவை நாம் வரவேற்போம்.
நமது வளர்ச்சிப் பயணத்தில் தெலுங்கானாவும் இணைந்து கொள்ளும். எத்தனையோ போராட்டங்கள், தியாகங்களுக்குப் பின்னர் தெலுங்கானா உதயமாகி உள்ளது. தெலுங்கானாவுக்காக போராடியவர்களுக்கு இத்தருணத்தில் நாம் மரியாதை செலுத்துவோம்.
தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரசேகர் ராவ் அவர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கானா மக்களுக்கும் அரசுக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறியுள்ளார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications