இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமை சசிகபூர் - பிரதமர் மோடி
இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர் சசிகபூர் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்தி நடிகர் சசிகபூர்.
இதற்காக அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிட்ட ட்வீட்டில், "சசி கபூர்ஜி ஒரு சிறந்த நடிகர். திரைப்படத் துறையில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர். தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற இருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
100-க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்துள்ள சசி கபூர் 'கபி கபி', 'த்ரிசூல்' 'தீவார்', 'நமக் ஹலால்' போன்ற பெரும் எவர் வெற்றிப் படங்களில் நடித்தவர்.
இந்த விருதை பெறும், 46வது திரைப்பட கலைஞர் சசிகபூர். தாதா சகோப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தங்கத் தாமரை விருதும், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications