சுனிதாவின் கடைசி ஆசை பலித்தது... புகையிலை பொருட்களில் எச்சரிக்கை படம் போட மோடி உத்தரவு
டெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையைப் புறக்கணித்து விட்டு, பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது உடல்நலக் கேடு தொடர்பான எச்சரிக்கை விளம்பரங்களை பெரிய அளவில் வெளியிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவு செய்தது.

அதன்படி சிகரெட் பாக்கெட்டுகளில் தற்போது 40% அளவுக்கு அச்சிடப்படும் எச்சரிக்கை படம் 85% பெரிதாக்கப்படவேண்டும். மத்திய சுகாதாரத்துறையின் இந்த முடிவு இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.
ஆனால், சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இதற்கிடையே, கடந்த வாரம் 2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான சட்டப்பிரிவை ஆய்வு செய்த பாரதிய ஜனதா எம்.பி. திலீப்காந்தி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதார அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதில், ‘இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆராய்ச்சியும், புகையிலைப் பொருட்களால் புற்றுநோய் வரும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. வெளிநாடுகளின் 2 ஆய்வுகள்தான் அப்படி கூறுகின்றன. புகையிலையின் காரணமாக மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை. எனவே, இது தொடர்பாக விரிவான ஆய்வு தேவை' என தெரிவிக்கப் பட்டிருந்தது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த அறிக்கைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார விளம்பரத்தில் இடம் பெற்றிருந்த சுனிதா தோமர், தனது மரணப் படுக்கையில் வேதனையோடு பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அதில் அவர் புகையிலை விற்பனையை ஒழுங்கு செய்யும் சட்டம் சரிவரப் பயன்படுத்தப் பட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இந்தக் கடிதத்தை எழுதிய சில நாட்களிலேயே சுனிதா தோமர் உயிரிழந்தார். சுனிதாவின் இக்கடிதம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு மாறாக, சிகரெட் மற்றும் பிற புகையிலைப்பொருட்களுக்கு எதிரான பட விளம்பரங்களை வெளியிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிகரெட் மற்றும் பிற புகையிலைப்பொருட்கள் மீதான எச்சரிக்கை விளம்பரங்களில் 60, 65 சதவீத விளம்பரங்களை வெளியிட அனுமதிக்குமாறு சுகாதாரத்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications