ஆஹா வாரணாசியில் மீண்டும் மோடி வெற்றி! 3-ஆவது இடத்தில் காங்கிரஸ்.. தொண்டர்கள் உற்சாகம்
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாடு முழுவதும் 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணத் தொடங்கியது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் 2-ஆவது முறையாக போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்து வந்தார்.

தலைமை அலுவலகம்
இதனால் பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து பாஜக தொண்டர்களை கட்சி அலுவலகத்துக்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாரணாசி
இந்த நிலையில் அனைத்து சுற்றுகளின் முடிவில் நரேந்திர மோடி 5,45,056 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவை விட 3.85 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் மோடி. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படடார். இதனால் வாரணாசியில் ஒரே கொண்டாட்டமாக உள்ளது.

புனித பயணம்
இவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரும் ஆவார். இவர் 7-ஆவது கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு அடுத்த நாள் கேதார்நாத், பத்ரிநாத்துக்கு புனித பயணம் மேற்கொண்டார்.

லோக்சபா தேர்தல்
அப்போது கேதார்நாத்தில் உள்ள மலையுச்சியில் தியானம் மேற்கொள்ள காவியுடையுடன் கையில் தடியுடன் 2 கி.மீ. தூரம் நடந்தே சென்றார். கடந்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி 5,81,023 வாக்குள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அரவிந்த் கேஜரிவால் 2,09, 238 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.












Click it and Unblock the Notifications