பிரதமர் மோடிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு: திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இத்ரிஸ் அலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடிக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று நினைக்கிறேன். பிரதமர் மோடி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று திரும்பிய பிறகு ஏன் பதான்கோட் விமானபடை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்? இது என் தனிப்பட்ட கருத்து என்றார்.

மேலும், மம்தா பானர்ஜியை சிறைக்கு அனுப்புவேன் என்று தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கவுதம் தெப்பிற்கு கண்டனம் தெரிவித்த இத்ரிஸ் அலி, இது போன்று மீண்டும் கூறினால் அவர் கை, கால்களை உடைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவரது கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ், இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார். திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications