மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக வெற்றி - வரலாற்று சிறப்பு மிக்கது என மோடி மகிழ்ச்சி
டெல்லி: ஹரியானா மற்றும் மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு கிடைத்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, இரண்டு மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
வரலாற்று சிறப்பு மிக்கது...
இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தல் முடிவாகும். பாஜகவுக்கு இது தீவிர மகிழ்ச்சியும் பெருமிதமுரம் அளிக்கும் விஷயமாகும்.
தொண்டர்கள்...
வெற்றிக்காக களைப்பின்றி உழைத்த தொண்டர்களை வணங்குகிறேன்.
நன்றி...
தங்களின் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பை பாஜகவுக்கு அளித்த ஹரியாணா மக்களுக்கு நன்றி. மகாராஷ்டிர மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உறுதி...
இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.