நவாஸ் ஷெரீபை சந்திப்பதை தவிர்க்க டாவோஸ் பயணத்தை ரத்து செய்தாரா மோடி?: மத்திய அரசு
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திப்பதை தவிர்க்க சுவிட்சர்லாந்தில் நடக்கும் பொருளாதார உச்ச மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் அன்று திடீர் என்று பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேசினார். அவருக்கு தலைப்பாகை எல்லாம் பரிசளித்துவிட்டு வந்தார். ஆனால் மோடி ஷெரீபை சந்தித்த சில நாட்களில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் ஜனவரி 20ம் தேதி முதல் துவங்கி 23ம் தேதி வரை பொருளாதார உச்ச மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வதால் அவரை சந்திப்பதை தவிர்க்க மோடி டாவோஸ் பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,
பிரதமர் மோடி டாவோஸ் செல்வதாக திட்டமிடவே இல்லை. அப்படி இருக்கையில் அவர் எப்படி டாவோஸ் பயணத்தை ரத்து செய்திருக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications