தேர்வில் காப்பியடிக்க உடந்தை.. ஐபிஎஸ் அதிகாரி மனைவி ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் அடைப்பு
சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பியடித்ததாக கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரீம் மற்றும் அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.
Recommended Video

ஹைதராபாத்: சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பியடித்ததாக கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரீம் மற்றும் அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இன்று காலை அவர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நேற்று முதல் நாள் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்ற ஷபீர் கரீம் புளூடூத் கருவியை பயன்படுத்தி காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
ஷபீர் கரீமின் மனைவி ஜாய்ஸ் ஜோய் அவரது ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காப்பியடித்த அதிகாரி
இந்திய ஆட்சிப்பணிகளுக்கான தேர்வு நேற்று முதல்நாள் சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு மாநில பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இங்கு தேர்வு எழுத வந்து இருந்தனர். இந்த நிலையில் ஐ பி எஸ் அதிகாரியாக இருக்கும் ஷபீர் கரீம் என்பவரும் ஐஏஎஸ் ஆக விருப்பப்பட்டு அங்கு தேர்வு எழுத வந்து இருந்தார். ஆனால் இவர் தேர்வு எழுதும் போது புளு டூத் கருவியை பயன்படுத்தி காப்பி அடித்து இருக்கிறார்.

போலீஸ் கண்டுபிடிப்பு
அவரை புழு டூத் கருவி மூலம் பதில்களை தெரிந்து கொண்டு காப்பியடித்தது இதில் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வறை கண்காணிப்பாளர்கள் இதை கண்டுபிடித்ததை அடுத்து போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரிடம் நடத்திய விசாரணையில், ஐதராபாத்தில் உள்ள அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவரது ஆசிரியர் ராம் பாபுவும் ஆகியோர் இந்த சம்பவத்தில் அவருக்கு உதவியது தெரியவந்தது.

மனைவி மீதும் வழக்கு
இதையடுத்து ஹைதராபாத் சென்ற தனிப்படை போலீசார் ஷபீர் கரீமின் மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவரது ஆசிரியர் ராம் பாபுவும் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏமாற்றுதல், காப்பியடித்தல், தொழில்நுட்ப பொருட்களை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்கள் மூவரும் நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

மனைவி புழல் சிறையில் அடைப்பு
இதையடுத்து நீதிமன்றத்தில் நடத்த விசாரணையின் முடிவில் இவரது மனைவியை புழல் சிறையில் அடைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ''இதற்கான இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை அதுவரை புழல் சிறையில் அவரது மனைவி இருக்க வேண்டும்'' என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்தனர். ஷபீர் கரீமின் மனைவி ஜாய்ஸ் ஜோய் அவரது ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் இன்று காலை அடைக்கப்பட்டார் . இந்த சம்பவம் இந்தியா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications