படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. "ஐயோ.." பாய்ந்தது போக்சோ வழக்கு
விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் நம்பி கல்வி கற்க வந்த பெண்ணிடமே ஆசிரியர் அத்துமீறியுள்ளார். மேலும், பொய்களைச் சொல்லி திருமணமும் செய்துள்ளார்.
பெற்றோருக்குப் பிறகு அனைவரது வாழ்க்கையிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். ஒருவரது வாழ்க்கையைச் செதுக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
பல இடங்களில் ஆசிரியர்களால் மாணவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. ஆனால், சில இடங்களில் மாணவிகளிடம் அத்துமீறுவது போன்ற மோசமான செயல்களில் ஆசிரியர்களே ஈடுபடுகின்றனர்.

ஆந்திரா
அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே கங்காவரம் மண்டல் பகுதியில் ஆசிரியர் ஒருவரே மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அங்கே உள்ள இன்டர் காலேஜ் (+1, +2 வகுப்புகள்) ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்த சலபதி (வயது 33) என்பவர் தான் தனது மாணவிகளில் ஒருவரையே ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பொய்கள்
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் எஸ்ஐ சுதாகர் ரெட்டி கூறுகையில், "கடந்த புதன்கிழமை சிறுமிக்கு இறுதி தேர்வு நடந்து முடிந்துள்ளது. அதன் பிறகு குற்றவாளி ஏதேதோ பொய்களைச் சொல்லி சிறுமியை ஏமாற்றியுள்ளார். சிறுமியை ஏமாற்றி அவர் திருப்பதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

திருப்பதியில் திருமணம்
தான் நேர்மையானவன் என்றும், தன்னை நம்பினால் கடைசி வரை நன்கு பார்த்துக் கொள்வேன் என்றெல்லாம் கூறியுள்ளார். மேலும், அச்சிறுமியைத் திருப்பதியிலேயே வைத்து திருமணமும் செய்துள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு சலபதியின் நடத்தையில் மாற்றம் தெரிந்துள்ளது. இதனால் பயந்து போய் குழம்பிய அந்த சிறுமி உடனடியாக தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டுள்ளார்.

ஏற்கனவே திருமணம்
அவரிடம் தனக்கு என்ன நடந்தது என்பதை முழுமையாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே அந்த சிறுமி தனது பெற்றோருடன் வியாழக்கிழமை இரவு கங்காவரம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். போலீசார் விசாரணையில் வேறு சில பகிர் தகவல்களும் தெரிய வந்துள்ளது. அதாவது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சலபதிக்கு ஏற்கனவே திருணமாகியுள்ளது.

வழக்குப்பதிவு
மேலும், ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை ஏமாற்றியுள்ளார். அந்த சிறுமி மைனர் என்பதால் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோலத் தான் அசாம் மாநிலத்தில் சமீபத்தில் மற்றொரு பகீர் சம்பவம் நடந்தது.

அசாம்
அங்கே மைனர் சிறுமி ஒருவர் தற்கொலையால் உயிரிழந்தார். அது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், "எனது மகள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம். இருப்பினும், மைனர் என்பதால் எங்கே போலீசார் எங்களைச் சிறையில் அடைத்துவிடுவார்களோ என்று அஞ்சி தற்கொலை செய்து கொண்டார்" என்றார். இருப்பினும், இதை மறுத்துள்ள போலீசார், வேறு காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications