சுனந்தா கொலை வழக்கு: ராஷ்டிரிய லோக் தள் தலைவர் அமர்சிங்கிடம் டெல்லி போலீஸ் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கு தொடர்பான ராஷ்டிரிய லோக் தள் தலைவரான அமர்சிங்கிடம் டெல்லி போலீஸ் இன்று தீவிர விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர்ம சாவு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுனந்தா கொல்லப்பட்ட அன்று மாலை சில பத்திரிகையாளர்களுடன் போன் மூலம் பேசியுள்ளார். அந்த பத்திரிகையாளர்களிடம் புலனாய்வுக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் ஐ.பி.எல். விவகாரம் தொடர்பாகவோ, சசிதரூருக்கு பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தராருடன் உள்ள தொடர்பு குறித்தோ சுனந்தா ஏதேனும் கூறினாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
மெஹர் தராருடன் சசிதரூருக்கு தொடர்பு உள்ளதாக சுனந்தா சந்தேகப்பட்டதாகவும், சசிதரூருக்காக ஐ.பி.எல். விவகாரத்தில் ஏற்பட்ட தொல்லையை தான் ஏற்றுக்கொண்டதாகவும் சுனந்தா பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. அதே போல் கொல்லப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும் தற்போதைய ராஷ்டிரிய லோக் தள் தலைவருமான அமர்சிங்கை தொடர்பு கொண்ட சுனந்தா ஐ.பி.எல். விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், சுனந்தா ஒரு முறை தம்மிடம் பேசியபோது, ஐ.பி.எல் விவகாரத்தில் என்மீது எந்த தவறும் இல்லை. அதில் சசிதரூர் செய்த முறைகேடுகளில் இருந்து நான்தான் அவரை காப்பாற்றினேன் என மிகுந்த கோபத்துடன் கூறினார். பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தரரை, துபாயில் சந்தித்தது தொடர்பாக சுனந்தாவும், சசிதரூரும் தன் முன்னிலையிலேயே கடுமையான வாக்குவாதம் நடந்தது என்றும் அமர்சிங் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே ஐ.பி.எல். விவகாரத்தில் புலனாய்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு அமர்சிங்கிடம் நடைபெறும் விசாரணையில் விடை கிடைக்கலாம் என்று போலீசார் எதிர்பார்த்து அவருக்கு சம்மன் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் முன்பு அமர்சிங் இன்று ஆஜரானார்.
இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், சுனந்தா மற்றும் சசி தரூர் இடையேயான உறவு குறித்து தம்மிடம் போலீசார் கேள்விகள் கேட்டதாகத் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications