சுனந்தா கொலை வழக்கு: ராஷ்டிரிய லோக் தள் தலைவர் அமர்சிங்கிடம் டெல்லி போலீஸ் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கு தொடர்பான ராஷ்டிரிய லோக் தள் தலைவரான அமர்சிங்கிடம் டெல்லி போலீஸ் இன்று தீவிர விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர்ம சாவு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுனந்தா கொல்லப்பட்ட அன்று மாலை சில பத்திரிகையாளர்களுடன் போன் மூலம் பேசியுள்ளார். அந்த பத்திரிகையாளர்களிடம் புலனாய்வுக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் ஐ.பி.எல். விவகாரம் தொடர்பாகவோ, சசிதரூருக்கு பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தராருடன் உள்ள தொடர்பு குறித்தோ சுனந்தா ஏதேனும் கூறினாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
மெஹர் தராருடன் சசிதரூருக்கு தொடர்பு உள்ளதாக சுனந்தா சந்தேகப்பட்டதாகவும், சசிதரூருக்காக ஐ.பி.எல். விவகாரத்தில் ஏற்பட்ட தொல்லையை தான் ஏற்றுக்கொண்டதாகவும் சுனந்தா பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. அதே போல் கொல்லப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும் தற்போதைய ராஷ்டிரிய லோக் தள் தலைவருமான அமர்சிங்கை தொடர்பு கொண்ட சுனந்தா ஐ.பி.எல். விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், சுனந்தா ஒரு முறை தம்மிடம் பேசியபோது, ஐ.பி.எல் விவகாரத்தில் என்மீது எந்த தவறும் இல்லை. அதில் சசிதரூர் செய்த முறைகேடுகளில் இருந்து நான்தான் அவரை காப்பாற்றினேன் என மிகுந்த கோபத்துடன் கூறினார். பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தரரை, துபாயில் சந்தித்தது தொடர்பாக சுனந்தாவும், சசிதரூரும் தன் முன்னிலையிலேயே கடுமையான வாக்குவாதம் நடந்தது என்றும் அமர்சிங் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே ஐ.பி.எல். விவகாரத்தில் புலனாய்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு அமர்சிங்கிடம் நடைபெறும் விசாரணையில் விடை கிடைக்கலாம் என்று போலீசார் எதிர்பார்த்து அவருக்கு சம்மன் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் முன்பு அமர்சிங் இன்று ஆஜரானார்.
இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், சுனந்தா மற்றும் சசி தரூர் இடையேயான உறவு குறித்து தம்மிடம் போலீசார் கேள்விகள் கேட்டதாகத் தெரிவித்தார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications