மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணத்தில் நடந்தது என்ன.. நெருங்கிய நண்பர்களிடம் போலீஸ் விசாரணை

மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் நெருங்கிய நண்பர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லியில் தொடரும் தமிழக மருத்துவ மாணவர்களின் உயிரிழப்புகள்

    டெல்லி: மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் நெருங்கிய நண்பர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது அரவிந்த், கார்த்திகேயன் என்ற இருவர் விசாரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனையில் முதுகலை பட்டம் படித்து வந்தார் சரத் பிரபு இவர் இன்று காலை மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவர் பின்தலையில் அடிபட்ட காயம் இருந்தது. மேலும் அவர் வழுக்கி விழுந்ததாகவும் அவர் நண்பர்கள் கூறியுள்ளனர்.

    Police interrogates Sharath Prabhu's friends in Delhi

    முதலில் தற்கொலை என்றே அனைவரும் நினைத்தார்கள். இந்த நிலையில் தற்போது இது கொலையாக இருக்குமோ என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் போலீசார் தற்போது சரத் பிரபுவின் நண்பர்களை விசாரித்து வருகின்றனர். சரத் பிரபுவும் அவரது நண்பர்கள் அரவிந்தன், கார்த்திகேயன் ஆகியோரும் இன்னொரு நபரும் ஒன்றாக வீடு எடுத்து கல்லூரிக்கு அருகில் தங்கி இருக்கிறார்கள்.

    தற்போது போலீஸ் இவர்களிடம் விசாரணையை தொடங்கி இருக்கிறது. இதில் கார்த்திகேயன், அரவிந்தன் மட்டுமே தற்போது விசாரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னொரு நபர் பொங்கல் கொண்டாட வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

    முக்கியமாக போலீசுக்கு தகவல் கொடுத்த அரவிந்த அதிக நேரம் விசாரிக்கப்பட்டு இருக்கிறார். தலையில் ஏற்பட்ட காயத்திற்கு போலீஸ் விளக்கம் கேட்டு இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+