திலீப்பை தொடர்ந்து சிக்கப்போகும் பெருந்தலைகள்... எம்எல்ஏக்களும், போலீ்ஸ் வலைக்குள்!

நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பிடம் நடத்தும் விசாரணையை அடுத்து மேலும் பலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் திலீப்பின் திட்டம் தெரிந்தும் மௌனமாக இருந்த 2 எம்எல்ஏக்கள் உள்பட மேலும் பலரை போலீசார் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கிறது.

தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17ம் தேதி அங்கமாலி அருகே காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை கடத்தல் கும்பல் வீடியோ பதிவும் செய்தது. இந்த வழக்கை விசாரித்த போலீசார் நடிகர் திலீப் ஆட்களை வைத்து பாவனாவை கடத்தி துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவரை கடந்த 10ம் தேதி கைது செய்தனர்.

நடிகர் திலீப்பை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த விசாரணையின் போது, கடத்தலுக்கு துணையாக இருந்த இரண்டாவது குற்றவாளி யார் என்று போலீசார் துருவித் துருவி கேட்டு வருகின்றனர். கடத்தலில் கூட்டு சதி செய்தவர்கள், விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தவர்கள், ஆதாரத்தை அழிக்க உதவியர்கள், காவல்துறையினரை கடமை செய்யவிடாமல் தடை ஏற்படுத்தியர்வகள் என்று பலரும் சிக்கி உள்ளதாக தெரிகிறது.

எம்எல்ஏக்களுக்கு தொடர்பு

எம்எல்ஏக்களுக்கு தொடர்பு

மேலும் நடிகை வழக்கில் 2 எம்எல்ஏக்களும் சிக்க உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குற்றத்தில் அவர்களுக்கு பங்கு இல்லை என்றாலும், திலீப்பின் திட்டம் முன்கூட்டியே தெரிந்தும் மௌனமாக இருந்ததற்காக இவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

அனுமதிக்காக காத்திருப்பு

அனுமதிக்காக காத்திருப்பு

எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில காவல்துறை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முதல்வர் பினராயி விஜயனின் அனுமதி கேட்டு காத்திருக்கின்றனர் போலீசார்.

வக்கீல் மீது சந்தேகம்

வக்கீல் மீது சந்தேகம்

இதே போன்று சுனில்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய வழக்கறிஞர் பிரதீஷ் சக்கோவையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர போலீஸ் குழு முடிவு செய்தள்ளது. இந்த வழக்கில் வக்கீல் சக்கோ ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றுள்ளார். எனினும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறுப்பு

மறுப்பு

நடிகை பாவனாவை துன்புறுத்திய வீடியோ ஆதாரமுள்ள செல்போனை சுனில்குமார் சக்கோவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 23ம் தேதி சுனில் அந்த செல்போனை சக்கோவின் அலுவலகத்தில் ஒப்படைத்ததாகவும் அவன் கூறியிருந்தார். ஆனால் போலீசார் சக்கோவின் அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+