ரஷ்மி, ராகுல் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை: லேப்டாப், டாப்லெட் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

கொச்சி: ஆன்லைன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாடல் ரஷ்மி நாயர், ராகுல் பசுபாலனின் கொச்சி வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், தனது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலனுடன் சேர்ந்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தார். ஃபேஸ்புக்கில் கொச்சு சுந்தரிகள் என்ற பெயரில் பக்கத்தை துவங்கி அதில் பெண்கள், சிறுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் கொடுத்தனர்.

Police raid Rashmi Nair's house: Laptop, tab seized

இந்நிலையில் கொச்சு சுந்தரிகள் பக்கம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது குறித்து விசாரித்தபோது தான் ரஷ்மியும், ராகுலும் சிக்கினர். இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்ட 12 மணிநேரம் கழித்து கொச்சியின் புறநகர் பகுதியான தீர்க்ககாராவில் உள்ள ராகுல் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

வீட்டின் கதவை திறந்தபோது போலீசாருக்கு உள்ளே செல்ல மனம் இல்லாத அளவுக்கு கண்ட்றாவியாக இருந்துள்ளது. வீடு அழுக்காகவும், எங்கு பார்த்தாலும் அழுக்கு துணிகளும், மது பாட்டில்களுமாக கிடந்துள்ளது.

சோதனையின்போது அங்கிருந்த லேப்டாப், டாப்லெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆன்லைன் விபச்சாரத்திற்கும் கிஸ் ஆப் லவ்வுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+