பெண் தலைமை ஆசிரியருக்கு பாலியல் தொல்லை.. பள்ளிக்குள்ளேயே அத்துமீறிய அரசியல்வாதி
பெங்களூரில் இருக்கும் பள்ளி ஒன்றில் பெண் தலைமை ஆசிரியர், பள்ளி வளாகத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார்.
பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் பள்ளி ஒன்றின் பெண் தலைமை ஆசிரியர், அரசியல் கட்சி நிர்வாகியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார். கடன் வாங்கிய பணத்தை அந்த பெண் திருப்பி தராத காரணத்தால் கர்நாடகாவின் மாநில கட்சி ஒன்றை சேர்ந்த ராம்கிருஷ்ணப்பா என்பவர் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.
பெங்களூரில் 'சிங்கநாயக்கனஹள்ளி' என்ற பகுதியில் கின்டர் கார்டன் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் ஆஷா. இவர் அரசியல் பிரமுகர் ராம்கிருஷ்ணப்பா என்பவரிடம் ரூ.70,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்.

இந்த கடன் தொகையை பல நாட்கள் ஆகியும் அந்த பெண் திருப்பி தராமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த ராம்கிருஷ்ணப்பா அந்த பள்ளிக்கு வந்து சண்டையிட்டு உள்ளார். மேலும் ஆஷாவை அவர் பாலியல் ரீதியாக சீண்டி துன்புறுத்தி இருக்கிறார்.
இந்த சம்பவம் அங்கு இருந்த மாணவர்கள் அனைவருக்கும் எதிரில் நடந்து இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் முழுக்க முழுக்க சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன் இவர் தலைமறைவாகிவிட்டார்.போலீசாரை இவரை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் இவரின் மகனிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications