லல்லுவுக்கு கிடைத்த சிறைதண்டனை மற்ற பேராசை அரசியல்வாதிகளுக்கு பாடம்: மம்தா

பீகாரின் முதல்வராக இருந்தபோது, ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவணம் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கோர்ட் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி பிர்சா முண்டா சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வங்கமொழி வார இதழ் ஒன்றில் தான் எழுதியுள்ள கட்டுரையில், ‘லல்லுவுக்கு கிடைத்த சிறைத் தண்டனையை மற்ற பேராசை அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைத்தப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
மேலும் அக்கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவிற்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இச்சம்பவத்தில் இருந்து எல்லா அரசியல்வாதிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என நான் வற்புறுத்துகிறேன்.
அவ்வளவு பேராசை எதற்கு? ஒருவர் அரசியல்வாதியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் ஒரு குடும்பத்தின் செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?
ஆடம்பரமாக வாழ ஆசைப்படாத வகையில் ஊழல் செய்வதற்கான தேவையே ஏற்படாது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. அனைத்து துறையிரும் கூட பேராசைகளை தவிர்க்க வேண்டும்' என இவ்வாறு மம்தா அக்கட்டுரையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications