வாவ்.. ராவணனுக்கு பிரம்மாண்ட பேனர்.. காற்று மாசு ஏற்படாமல் வித்தியாசமாக விஜயதசமி கொண்டாடிய மக்கள்!
காற்று மாசு ஏற்படாமல் வித்தியாசமாக ஒடிசாவில் விஜயதசமியைக் கொண்டாடியுள்ளனர்.
Recommended Video
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மற்ற நகரங்களுக்கு முன்னுதாரணமாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விஜயதசமி. படிப்பு கடவுளான சரஸ்வதி தேவியை பூஜிப்பதற்காக கொண்டாடப்படும் பண்டிகை தான் விஜயதசமி.

ஆனால் இப்பண்டிகைக்கு வேறு காரணங்களும் கூறப்படுகின்றன. அவை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. தென்னிந்தியாவை பொறுத்த வரை, உலகை ஆட்டிப் படைத்த மகிசாசூரன் எனும் அரக்கனை துர்கா தேவி வதம் செய்த நாளாக விஜயதசமி அறியப்படுகிறது.
தமிழகத்தில் திருச்செந்தூர் அருகே உள்ள குளசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல் மைசூர் தசரா திருவிழாவும் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம்.
ஆனால் வட மாநிலங்களை பொறுத்த வரை இராவணனை ராமர் வதம் செய்த நாளாக விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. அதனை குறிக்கும் வகையில் பல ஊர்களில் ராவணனின் உருவ பொம்மையை தீ வைத்து எரிப்பது வழக்கம்.
நாளடைவில் இந்த வழக்கத்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது அதிகரித்தது. எனவே சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் ஒடிசா மாநிலத்தில் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஒடிசா மாநிலம் நாயபள்ளி எனும் ஊரில் ராவணனின் உருவ பொம்மைக்கு பதிலாக, பெரிய சைஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அந்த பேனரை எரிப்பதற்கு பதிலாக, ஒருவர் அதில் ஏறி பேனரை கிழித்தார். இதனால் காற்று மாசு தவிர்க்கப்பட்டதாக அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.
ஒடிசாவைப் பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் இதே போல், பண்டிகைகளைக் கொண்டாடலாம் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications