பி.எப். உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் கை வைத்த மத்திய அரசு.. வட்டி குறைப்பால் ஏழைகளுக்கு பாதிப்பு
அரசின் இந்த நடவடிக்கையால், வங்கிகளும் தங்களது டெபாசிட்டுகள் மீதான வட்டியை குறைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கி சேமிப்புதாரர்களும் பாதிக்கப்படுவார்கள்.
டெல்லி: பி.எப். உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அறிமுகமாகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு காலத்திற்கு இந்த வட்டி விகிதம் நடைமுறையில் இருக்கும்.
பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட், சுகன்யா சம்ருத்தி (செல்வ மகள் சேமிப்பு திட்டம்), முதியோர் சேமிப்பு திட்டங்களில் கை வைத்துவிட்டது மத்திய அரசு.

பெண் குழந்தைகள் சேமிப்பு
இந்த புதிய விதிமுறைப்படி, பி.பி.எப் மற்றும் ஐந்தாண்டுகளுக்கான தேசிய சேமிப்பு சர்டிபிகேட் ஆகியவற்றுக்கு தற்போதுள்ள 8 சதவீத வட்டி இனிமேல் 7.9 சதவீதமாகும். பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டமான சுகன்ய சம்ருத்தி திட்டத்திற்கு தற்போது 8.5 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இதிலும் கை வைத்துள்ள மத்திய அரசு, வட்டி விகிதத்தை 8.4 ஆக குறைத்துள்ளது.

காலாண்டு மாற்றம்
"அரசின் முடிவுப்படி, சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்" என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சீனியர் சிட்டிசன்ஸ்
கிசான் விகாஸ் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும், ஐந்தாண்டுகளுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.4 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்பு சர்டிபிகேட் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சேமிப்பு டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடருகிறது.

மக்களுக்கு பாதிப்பு
அரசின் இந்த நடவடிக்கையால், வங்கிகளும் தங்களது டெபாசிட்டுகள் மீதான வட்டியை குறைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கி சேமிப்புதாரர்களும் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் முதலே, காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை மாற்றும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறிப்படித்தக்கது. அரசின் பத்திரங்கள் முந்தைய 3 மாதங்களில் ஈட்டியதைவிட சற்று கூடுதலாக சிறுசேமிப்பு கடன்கள் மீதான வட்டியை நிர்ணயிக்க வேண்டும் என்பது ஷியாமளா கோபிநாத் குழு வழங்கிய பரிந்துரையாகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications